ஞாயிறு, 22 ஜூன், 2014

ஒரு பிரிவின் வலி!


என் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் ஆனது
நீ என்னருகே இல்லாத தருணம்!

தினமும் காலை உன் முகம் காண வேண்டி
ஓடோடி வந்தேன்...

இன்று உன் முகம் காண வேண்டி
ஏங்கி நிற்கிறேன்...

மழை நீர் பட்டு மகிழ்ச்சியில் செழித்திடும் புல்வெளி போல்
உன் பார்வை பட்டு செழிப்பாய் இருந்தேன் தினமும்

இன்று கோடை வெயிலில் காய்ந்திடும் புல் சருகு போல்
உன் பார்வை படாமல் கருகி நிற்கிறேன்...

நீ என் பெயரை  அழைக்கும் ஒவ்வொரு முறையும் என்  இதயம்
துள்ளி குதித்தது!

இன்று உன் குரல் கேக்க  ஏங்கி ஏங்கி என் இதயம் படுத்த
படுக்கையாய் கிடக்கிறது...  

உன்னோடு சேர்ந்து நடந்த பாதைகள் மின்மினியாய் ஜொலித்தது
இன்று நான் தனியாய் நடந்தால் எல்லாம்  இருளாய் தெரிகிறது...

உன்னோடு கை கோர்த்து இனிமையில் நடந்த நாட்கள் எல்லாம்
பெரும் வலியாய் இன்று என் தனிமையில் உணர்கிறேன்!

வானத்தையும் தொட்டு வரும் வலிமையாக உணர்ந்தேன் நீ என்னுடன்
இருந்த பொழுது... சிறகுடைந்த பறவை போல் கிடக்கிறேன் இன்று நீ இல்லாமல்!

உன் பிரிவின் வலியால் உருகிய என் மனதை
உன் குரலின் ஒலியால் போக்க என்று வருவாயோ...

செவ்வாய், 6 மே, 2014

சோகத்தின் மருந்து!


துன்பங்கள் ஆயிரம் வாட்டிய போதும்
இன்பமாய் ஆக்கிடும் உன் செல்ல பேச்சு...

ஏக்கங்கள் நெஞ்சினில் புதைந்திட்ட போதும்
தூக்கங்கள் இனித்திடும் கனவில் உன் வருகை...

தேடல்கள் மனதினில் தவித்திடும் போதும்
பாடலாய் நின்றிடும் உந்தன் நினைவு...

கவலைகள் கண்களில் குவிந்திடும் போதும்
கடலலையாய் இழுத்திடும் உன் அழகு சிரிப்பு...

காயங்கள் தழும்பாய் வலித்திடும் போதும்
மயாமாய் மாற்றிடும் உன் அரவணைப்பு...

சோகங்கள் இதயத்தில் சேர்ந்திடும் போதும்
மேகமாய் மறைத்திடும் உந்தன் அன்பு...

திங்கள், 28 ஏப்ரல், 2014

என் ஊதா உலகம் நீ...





ஜனவரியில் மலர்ந்த ஊதாப் பூ நீ
என் மன வலியை குறைத்த பேரன்பு நீ...
யாருக்கும் கிடைத்திடா நான் கண்ட பாசப் புதையல் நீ...

மூன்றெழுத்தில் உதித்த சூரியன் நீ
என் தலை எழுத்தை மாற்றிய காவியம் நீ
அள்ள அள்ள குறையாத நான் பெற்ற செல்வமும் நீ...

பூலோகத்தில் பிறந்த தேவதை நீ
என் சோகத்தை மறைத்திடும் அதிசயம்  நீ
என்றுமே வற்றாத  என் அன்பு  நீரூற்றும் நீ...

காலையில் மின்னிடும் நட்சத்திரம் நீ
என் கவலையை போக்கிடும் மருந்து நீ
நான் கேட்காமல் கிடைத்த  கடவுளின் வரமும் நீ....

தினமும் தோன்றிடும் வானவில் நீ
என் மனதை அமைதி செய்த  கோவில் நீ
என் வாழ்வை இனிக்கச் செய்த இன்பத் தேனும் நீ...

பாலைவனத்தில் உருவான அருவி நீ
என் உலகை சோலைவனமாக்கிய கருவி நீ
என்னை பிரித்தாலும் பிரிக்க முடியா பிறவியும் நீ...

இறைவனின் படைப்பில் பேரழகி நீ
என் இதய வீட்டில் முதல்  தோழி நீ
என் விலை மதிப்பில்லா வைரக் கிளியும் நீ...

பூமியில்  அதிசய சொர்க்கம் நீ
என் நேசம் குறையாத  சொந்தம் நீ
நான் இங்கு கண்ட அம்மா பந்தமும் நீ...

சனி, 8 பிப்ரவரி, 2014

உன் முகம் காணத் துடித்தேனடி!


உன் முகம் காணத் துடித்தேனடி!

உன் பிரிவாலே தவித்தேனடி!

பல கடல் தாண்டி நானிருந்து உன் சுகம் காண ஏங்கிக்கொண்டு
என் உடல் நலம் கெடுத்தேனடி...

என் எதிர்காலம் நீ அங்கிருக்க  என் நிகழ் காலம் இருளில் இங்கு
அலங்கோலம் ஆகி போகுதடி........


 நீ அழகான என் பைங்கிளி.....
என்னை சிலையாக்கும் உன் கரு விழி....

நீ தொட்டாலே என் உயிர் பல யுகம் தாண்டி போகுமடி
உன் தொடல் இன்றி மடிந்தேனடி..........

உன் சிரிப்பாலே நீ என்னை சிறை வாசம் செய்வாயே
உன் சிரிப்பின்றி சரிந்தேனடி.........


எல்லாம் கனவாக தோணுதடி!
உன் நினைவாக உயிர் வாழுதடி!

என் உறக்கம் கலைக்க நீ ஓடோடி வருவாயோ
என் மீது இறக்கம் கொள்வாயடி.....

அந்த அழகான நாட்களை மீண்டும் நீ தருவாயோ
என் உயிரோடு கலப்பாயடி...

( தொலைவில் இருந்து கொண்டு தன் அன்பானவர்களை தேடும் அனைவருக்காகவும் இது)


படைப்பு: ராசிக்