செவ்வாய், 6 மே, 2014

சோகத்தின் மருந்து!


துன்பங்கள் ஆயிரம் வாட்டிய போதும்
இன்பமாய் ஆக்கிடும் உன் செல்ல பேச்சு...

ஏக்கங்கள் நெஞ்சினில் புதைந்திட்ட போதும்
தூக்கங்கள் இனித்திடும் கனவில் உன் வருகை...

தேடல்கள் மனதினில் தவித்திடும் போதும்
பாடலாய் நின்றிடும் உந்தன் நினைவு...

கவலைகள் கண்களில் குவிந்திடும் போதும்
கடலலையாய் இழுத்திடும் உன் அழகு சிரிப்பு...

காயங்கள் தழும்பாய் வலித்திடும் போதும்
மயாமாய் மாற்றிடும் உன் அரவணைப்பு...

சோகங்கள் இதயத்தில் சேர்ந்திடும் போதும்
மேகமாய் மறைத்திடும் உந்தன் அன்பு...