உன் முகம் காணத் துடித்தேனடி!
உன் பிரிவாலே தவித்தேனடி!
பல கடல் தாண்டி நானிருந்து உன் சுகம் காண ஏங்கிக்கொண்டு
என் உடல் நலம் கெடுத்தேனடி...
என் எதிர்காலம் நீ அங்கிருக்க என் நிகழ் காலம் இருளில் இங்கு
அலங்கோலம் ஆகி போகுதடி........
நீ அழகான என் பைங்கிளி.....
என்னை சிலையாக்கும் உன் கரு விழி....
நீ தொட்டாலே என் உயிர் பல யுகம் தாண்டி போகுமடி
உன் தொடல் இன்றி மடிந்தேனடி..........
உன் சிரிப்பாலே நீ என்னை சிறை வாசம் செய்வாயே
உன் சிரிப்பின்றி சரிந்தேனடி.........
எல்லாம் கனவாக தோணுதடி!
உன் நினைவாக உயிர் வாழுதடி!
என் உறக்கம் கலைக்க நீ ஓடோடி வருவாயோ
என் மீது இறக்கம் கொள்வாயடி.....
அந்த அழகான நாட்களை மீண்டும் நீ தருவாயோ
என் உயிரோடு கலப்பாயடி...
( தொலைவில் இருந்து கொண்டு தன் அன்பானவர்களை தேடும் அனைவருக்காகவும் இது)
படைப்பு: ராசிக்