ஞாயிறு, 22 ஜூன், 2014

ஒரு பிரிவின் வலி!


என் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் ஆனது
நீ என்னருகே இல்லாத தருணம்!

தினமும் காலை உன் முகம் காண வேண்டி
ஓடோடி வந்தேன்...

இன்று உன் முகம் காண வேண்டி
ஏங்கி நிற்கிறேன்...

மழை நீர் பட்டு மகிழ்ச்சியில் செழித்திடும் புல்வெளி போல்
உன் பார்வை பட்டு செழிப்பாய் இருந்தேன் தினமும்

இன்று கோடை வெயிலில் காய்ந்திடும் புல் சருகு போல்
உன் பார்வை படாமல் கருகி நிற்கிறேன்...

நீ என் பெயரை  அழைக்கும் ஒவ்வொரு முறையும் என்  இதயம்
துள்ளி குதித்தது!

இன்று உன் குரல் கேக்க  ஏங்கி ஏங்கி என் இதயம் படுத்த
படுக்கையாய் கிடக்கிறது...  

உன்னோடு சேர்ந்து நடந்த பாதைகள் மின்மினியாய் ஜொலித்தது
இன்று நான் தனியாய் நடந்தால் எல்லாம்  இருளாய் தெரிகிறது...

உன்னோடு கை கோர்த்து இனிமையில் நடந்த நாட்கள் எல்லாம்
பெரும் வலியாய் இன்று என் தனிமையில் உணர்கிறேன்!

வானத்தையும் தொட்டு வரும் வலிமையாக உணர்ந்தேன் நீ என்னுடன்
இருந்த பொழுது... சிறகுடைந்த பறவை போல் கிடக்கிறேன் இன்று நீ இல்லாமல்!

உன் பிரிவின் வலியால் உருகிய என் மனதை
உன் குரலின் ஒலியால் போக்க என்று வருவாயோ...