ஜனவரியில்
மலர்ந்த ஊதாப் பூ நீ
என் மன வலியை குறைத்த
பேரன்பு நீ...
யாருக்கும்
கிடைத்திடா நான் கண்ட பாசப்
புதையல் நீ...
மூன்றெழுத்தில்
உதித்த சூரியன் நீ
என் தலை எழுத்தை மாற்றிய
காவியம் நீ
அள்ள அள்ள குறையாத நான்
பெற்ற செல்வமும் நீ...
பூலோகத்தில்
பிறந்த தேவதை நீ
என் சோகத்தை மறைத்திடும் அதிசயம் நீ
என்றுமே
வற்றாத என்
அன்பு நீரூற்றும்
நீ...
காலையில்
மின்னிடும் நட்சத்திரம் நீ
என் கவலையை போக்கிடும் மருந்து
நீ
நான் கேட்காமல் கிடைத்த கடவுளின்
வரமும் நீ....
தினமும்
தோன்றிடும் வானவில் நீ
என் மனதை அமைதி செய்த கோவில்
நீ
என் வாழ்வை இனிக்கச் செய்த
இன்பத் தேனும் நீ...
பாலைவனத்தில்
உருவான அருவி நீ
என் உலகை சோலைவனமாக்கிய கருவி
நீ
என்னை பிரித்தாலும் பிரிக்க முடியா பிறவியும்
நீ...
இறைவனின்
படைப்பில் பேரழகி நீ
என் இதய வீட்டில் முதல் தோழி
நீ
என் விலை மதிப்பில்லா வைரக்
கிளியும் நீ...
பூமியில் அதிசய
சொர்க்கம் நீ
என் நேசம் குறையாத சொந்தம் நீ
நான் இங்கு கண்ட அம்மா
பந்தமும் நீ...