திங்கள், 5 நவம்பர், 2012

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்துவின் வரிகளில் வெளியான நெஞ்சுக்குள்ளே பாடல்...


இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பான 'கடல்' திரைப்படத்தின் ஒரு பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் Mtv யின் சிறப்பு நிகழ்வில் பாடினார். நெஞ்சுக்குள்ளே என தொடங்கும் அப்பாடல் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு Mtv யில்  நேரடியாக ஒளிபரப்பானது மற்றும் Mtv  இணைய தளத்திலும் ஒளிபரப்பப்பட்டது.

மனதிற்கு இதமான அந்த மெலடி ரக பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது மேலும் சமூக வலைதளங்களிலும் அந்த பாடல் உலா வரத்  தொடங்கியுள்ளது. இந்த பாடலின் அதீத வரவேற்ப்பின் காரண மாக கடல் படத்தின் மீதமுள்ள பாடல்களைக் கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.  இந்நிகழ்ச்சியின் பிறகு ட்விட்டரில் எழுதியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் . இப்படியொரு பாராட்டுக்கள் கிடைக்கும் என்று தான் எதிபார்க்கவில்லை என்றும்  அனைவருக்கும் தனது நன்றியினையும்  தெரிவித்துள்ளார்.

கடல் திரைப்படத்தின் மூலம், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து கூட்டணி மீண்டும் கை கோர்த்துள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கதாநாயகனாக வும் நடிகை ராதா வின் இளைய மகள் துளசி கதாநாயகியாகவும்  அறிமுகம் ஆகிறார்கள். 

ஏ.ஆர்.ரஹ்மான் MTV நிகழ்ச்சியினைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்...


0 கருத்துகள்:

கருத்துரையிடுக