வெள்ளி, 2 நவம்பர், 2012

முதல் பதிவு: கொஞ்சம் என்னைப் பற்றி...


சுமார் ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் பிளாக் பற்றி அறிந்ததாக ஒரு சிறு நியாபகம். அப்பொழுது அதைப்பற்றி முழுதாக அறிந்து கொள்ள எந்த ஒரு தேவையும் இல்லை விருப்பமும் இல்லை. காலப்போக்கில் இணையத்தின் வளர்ச்சியால் நான் அதை விட்டு விலகி இருந்தாலும் அது என்னை மெது மெதுவாக தொற்றிக்கொண்டது. எனக்கு பொதுவாக எழுதுவது என்றாலே கொஞ்சமும் விருப்பம் இல்லை அதனால் எதுவும் எழுவதும் இல்லை அதனாலோ என்னவோ நம்முள் உதிக்கும் சிறு சிறு சிந்தனைகளும் உணர்வுகளும் அப்படியே மறைந்து போய் விடுகின்றது. அதன் ஆர்வத்தினால் 2  வருடங்களுக்கு முன்பு ப்ளாக் ஒன்றை தொடங்கி ஆங்கிலத்தில் எழுதி வந்தேன். எதோ போதாத காலம் அது ஒரு   இலவச ஹோஸ்டிங் என்பதால் என் அக்கவுண்டை டெலிட் செய்து விட்டார்கள். அதன் பிறகு அதன் மேல் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தது.

இப்போது மீண்டும் மெதுவாக ப்ளாக் ஆர்வம் துளிர் விட்டிருக்கிறது, அனைவரையும் என் எழுத்தால்  கவர்ந்திழுக்கும் அளவிற்கு நான் ஒரு எழுத்தாளன் இல்லை என்பது தான் உண்மை இருந்தாலும் எழுதுவதினால்  எனக்குள்ளும் ஏதோ சிந்தனைகள்  தோன்றலாம் என்ற பேராசையினால் எனக்கு நன்கறிந்த தமிழ் மொழியை கையில் எடுத்து இந்த இணையத்தில் காலெடுத்து வைக்கின்றேன்.

டைம் பாஸ் பண்ணுகின்ற அளவிற்கு எனக்கு டைம் இல்லையென்றாலும் ப்ளாக் எழுதி  கொஞ்சம் டைம் பாஸ் பண்ணலாம் என்ற நோக்கோடு.....


ராசிக்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக