புதன், 6 பிப்ரவரி, 2013

இது மறதியா இல்லை மறக்கடித்தலா ?

ஒவ்வொருமுறை பயங்கரவாதமும் தீவிரவாதமும் இன்னபிற வாக்கு வாதமும் நம் நாட்டில் விஸ்வரூபமெடுத்து நின்ற பொழுதெல்லாம் அதை நினைத்து மனம் வெம்பி ரௌத்திரம் கொள்ளும் சிலபேர்களும் அதை கண்டும் காணாததுமாய் அமைதி கொள்ளும் பலபேர்களும் மீண்டும் மற்றுமொரு விவகாரம் இடைமறித்துக் கொள்ளும் பொழுது முந்தய நிகழ்வுகளை அடியோடு மறந்து விடும் ஒரு அற்புத உணர்வு நம்மனைவரையும் ஆட்டிபடுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு பெயர் மறதியா இல்லை மறக்கடித்தலா என்பது இன்னும் தெளிவாக புலப்படவில்லை. 

நாட்டில் தலைவிரித்தாடும் ஒவ்வொரு பிரச்சனைகளும் ஒரு தருணத்தில் அடியோடு மறக்கடிக்கப்பட்டு விடுகிறது இதன் காரணமாகவோ என்னோவோ இதுவரையில் எந்த ஒரு பிரச்சனைகளும் நிரந்தர தீர்வடைந்ததாக தெரியவில்லை. அதைப்போன்று பல நேரங்களில் பிரச்சனைகள் சிலரால் உருவாக்கப்படுவது போலும் தோன்றுகிறது, நாட்டில் உலவும் சில அடிப்படை பிரச்சனைகளை   மூடி மறைப்பதற்காக வேறு சில பிரச்சனைகள் உருவாக்கப்படுவதால் முந்திய பார்வை அதை விட்டு நகர்ந்து இதில் தொற்றிக்கொள்கின்றது. மனம் ஒரு குரங்கு என்ற கூற்றுக்கேற்ப நம் மனம் தாவிக்கொன்றே செல்கின்றது இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நம் மனம் பெரிதாக ஏதும் சிந்திக்க தோன்றவில்லை. இந்த ஒரு மாயப் பணியை செம்மன செய்யும் வித்தை காரர்களாக இருக்கிறார்கள் உயரிய அரியணையில் இருக்கும் சி(ப)ல பேர். அதை சற்றும் புரிந்து கொள்ள இயலாத அப்பாவிகளாக இருக்கிறார்கள் நம்மக்கள்... 

திசை மாற்றுதல் என்பது ஒரு நற்செயல், ஒருவன் செல்லும் பாதை தீங்கானதாக தோன்றும் தருணம் அவனை சரிபடுத்தி நேர் வழி காட்டுதல் அவனை நல்வழிப் படுத்தும் ஒரு மேன்மையான செயல்  ஆனால்  மாறாக திசை மாற்றுதல் ஒரு கொடிய செயலாக காட்டும் இடமாக இதுபோன்று துர்காரியங்கள் இருக்கின்றது. அவ்வாறு திசை மாற்றி நம்மை மறக்கடிக்கும் கயவர்களாகத் தான் நம் தேசத்தை ஆள்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மறதி என்னும் வியாதி நம்மை விட்டு அகன்று செல்லும் வரை நாம் மறக்கடிக்கப் பட்டுக் கொண்டு தான் இருப்போம் என்பதில் ஐயமில்லை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக