புதன், 6 பிப்ரவரி, 2013

அணு விதைத்த பூமியிலே! விஸ்வரூபம் பாடல் வரிகள் !



கமல் அவர்களின் விஸ்வரூபம் படத்தில் தானே எழுதி பாடிய இந்த பாடலின் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது ! அதன் முழு வரிகள் இங்கே...

அணு விதைத்த பூமியிலே
அறுவடைக்கும் அணு கதிர் தான்

பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில் இன்று வரை இல்லை

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா...

கருவறையும் வீடல்ல கடல் சூலலதுவும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக