வியாழன், 7 பிப்ரவரி, 2013

முதல் கவிதைக்கு கவிஞனின் பாராட்டு!

என் முதல் கவிதை குழந்தைக்கு கவிஞர் கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்களிடமிருந்து கிடைத்த பாராட்டையும் அவர்களின் கருத்தையும் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது என்னை மேலும் செம்மைப் படுத்த மிக்க உதவியாக இருக்கும். இதற்காக கவிஞர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் இது போன்ற பல படைப்புகளை கொடுக்க இது ஊக்கமளிக்கும் விதமாகவும் பல கவிஞர்களின் படைப்புகளை படிக்க ஆர்வமளிக்கும் விதமாகவும் இருக்கின்றது. 

இதோ கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்களின் பாராட்டுகளும் என் முதல் கவிதையின் பிழைகளும் !!!

"நல்ல முயற்சி. பாராட்டுகள்.

முதல் சில வரிகள் மிகவும் பெரிதாக இருக்கின்றன. அந்த மாதிரி இருப்பதால் கொஞ்சம் உரைநடை சாயல் அடிக்கிறது. அடுத்து வரும் வரிகள் சிறிதாக இருக்கின்றன. கவிதை முழுவதும் ஒரு UNIFORMITY இருந்தால் நன்றாக இருக்கும்.

முதல் அடியில் ,

"கிடைப்பது கிடைக்காமல் அதனால் மனதினுள் அடக்கிடும் பேரிடிகளும்"

என்று எழுதுவதற்கு பதிலாக கிடைப்பது "கிடைக்காமல் மனதினுள் அடக்கிடும் பேரிடிகளும்" என்று சுருக்கலாம்.

பிறகு,

"எம்மண்ணில் எமக்கு வாழ தகுதியில்லையோ என்றெண்ணும் வகையில் உம் அடக்குமுறைகளை எம்மீது ஏவ
உரிமைகள் ஏதுமின்றி உமக்கு அடிமையாய் நாம் சாவ"

இவ்வளவு பெரிய வரிகளைத் தவிர்க்க வேண்டும். ஏவ என்பதற்கு எதுகையாய் சாவ என்று எழுதியிருக்கிறீர்கள். ஏவ என்பது நல்ல தமிழ். சாவ என்பது கொச்சைத் தமிழ். இதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

இந்தக் கவிதையில் யாரை எதிர்த்து போராடுகிறீர்கள் என்ற தெளிவு இல்லை. படத்தைப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரை அடக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல கவிதை என்பது பதிவாகவும், படைப்பாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் கவிதை ஒரு நல்ல பதிவாக இருப்பினும் படைப்பாக இல்லை என்பது என் கருத்து.

முதல் கவிதை என்பதால் போகப் போகச் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அதற்கு நீங்கள் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை நிறைய படிக்க வேண்டும். 

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்."

என் கவிதை வரிகள் இங்கே...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக