புதன், 6 பிப்ரவரி, 2013

போராடுதல் !



கிடைப்பது கிடைக்காமல் அதனால் மனதினுள் அடக்கிடும் பேரிடிகளும்
எம்மினம் உம்மால் ஒடுக்கப்பட்டு அதனால் கிட்டிடும் பல அடிகளும்


கண்ணுறங்காமல் எம்மக்களை நாம் காக்க நினைக்க  
தங்கள் பல  பலத்தால் நீங்கள் எங்களைத் தாக்க  நினைக்க

எம்மண்ணில் எமக்கு வாழ தகுதியில்லையோ என்றெண்ணும் வகையில் உம் அடக்குமுறைகளை எம்மீது ஏவ
உரிமைகள் ஏதுமின்றி உமக்கு அடிமையாய் நாம் சாவ


உண்ண உறங்க இடமின்றி எங்கெங்கோ யாம் ஓடோட
விடாமல் துரத்தி எங்கள் உயிர்களைப் பறிக்க நீ நாட

பதட்டமே எம்  வாழ்க்கையாய் நீ மாற்றினாய்
உன் வலிமை கண்டு உம்மை நீயே போற்றினாய்

எம் வளர்ச்சியில்  நீ அச்சம் கொண்டு கருவறுக்க நினைத்து
எம் சந்தோசம் கலைத்து நீ உம்மை வளர்த்தாய்

அடி பல கண்டு கண்டு எம் சொந்த  பந்தங்கள்  இழந்து
மேலும் இழக்க ஏதுமின்றி  திக்கு தடுமாறி களைத்து

உம்  சர்வாதிகாரத்தை அடக்க எம் அதிகாரத்தை கையில் எடுத்து
உம் போக்கை முடக்க போராடுவோம் !!!

2 கருத்துகள்:

முதல் கவிதை மாதிரி தெரியவில்லையே. ரொம்ப நல்ல பாடல் வரிகள், நல்ல கவிதை நயம். பாராட்டுகள்!

amas32

கருத்துரையிடுக