பெண் நாட்டின் கண் என்பார்கள் ஆனால்
அப்பெண்ணின் மீது தான் பலர் கண்...
அழகின் வடிவமாய் பெண்ணைப்
படைத்தது கடவுளின் குற்றமோ?
அல்லது அழகு பதுமைகள் நிறைந்த
உலகில் கயவர்களையும் படைத்தது
கடவுளின் குற்றமோ?
பெண் சிசுக்கொலை குறைந்ததென்று
பெருமூச்சு விடும் வேளையிலே
பெண் காமக் கொலை நிறைந்து கொண்டே
செல்கிறது இப்பூவுலகில்!
காமுகனின் பார்வையிலே கற்பு
என்ன செருப்போ? உன் தேவைக்கு
அணிந்துவிட்டு வீசி எறிய...
மங்கையின் மதிப்பை மங்க செய்யும்
மிருகங்கள் நாட்டில் சுகபோகமாய்
சுற்றித் திரியும் பெருங்கொடுமை
வேறெங்கிலும் உண்டோ ?
உறவென்றால் என்ன வென்று அறியாத
இளம்பிஞ்சுகளை உன் இச்சை தீர்க்க
பலி கொள்ளும் அரக்கர்கள் இவ்வுலகில்
வாழ்ந்து பயனுண்டோ ?
பெண்ணாய் பிறந்தது அஞ்சி மடியவா
என்று மனக்கூச்சலிடும் பெண்கள் தான்
இந்நாட்டில் ஏராளம்!
உன் காதல் வலையில் சிக்காதது
அவள் தவறா ? இல்லை அவள் மனம்
விரும்பாததை செய்வது தான் உகந்ததா?
உன் மோகத் தொல்லையில் அவள் படும்
அவஸ்தை தான் நீ அறிவாயா ?
நம் தாய், சகோதரியின் நலம் நாடும் நாம்
பிறர் தாய், சகோதரியை கேடு நினைப்பது
தான் முறையாகுமா ?
என்று தணியும் இந்த சதைப் பித்தும்,
காதலின் பேரிலே பெண்ணைத் துரத்தும்
மோகப் பித்தும் ? எந்நூற்றாண்டில் தான்
பெண் கொடுமை நீங்கும் நாள் வரும் ?
படைப்பு: ராசிக்
3 கருத்துகள்:
ரொம்ப உருக்கமாக உள்ளது. சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.
amas32
amas நன்றி அக்கா :)
அற்புதமான படைப்பு.
கருத்துரையிடுக